Wednesday 8th of May 2024 01:38:07 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில்
கொரோனா முடக்கத்தால் 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம்!

கொரோனா முடக்கத்தால் 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம்!


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக தபால் போக்குவரத்து இடம் பெறாமையே இந்த தேக்கத்துக்கு காரணம் என ஒன்றிணைந்த தபால் தொழற்சங்க ஒன்றியத்தின் அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவிக்கையில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிகளில் குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதால் அதிகளவான ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடியதாக இருக்கும் என்றும், இதனால் இந்த சிக்கல் எதிர்வரும் வாரத்தை எட்டும் போது தீர்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE